கிருஷ்ணகிரியில் வணிகர் சங்க பேரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் வணிகர் சங்க பேரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் ஆலோசனைப்படி கிருஷ்ணகிரி மேற்கு நகர கழக பொறுப்பாளர் என்.அஸ்லம் கலந்து கொண்டு பேசும்போது, கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வணிகர்களுக்கு என்றும் உறுதுணையாக இருந்து வருகிறார்.
இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் அவர்களும் கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர் சங்க பேரவைக்கு உறுதுணையாக இருக்கிறார், வணிகர்களின் குறைகள் ஏதேனும் இருப்பின் மதியழகன் அவர்களிடம் கூறி நிறைவேற்றி தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
வரும் காலங்களிலும் கழகத் தலைவரின் திராவிட மாடல் ஆட்சிக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.