ஊழல் தடுப்புச் சட்டம் - 1988 பாகம் - 5
சட்டம்

அபராதம் நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை (பிரிவு 16)
ஒரு அரசுப் பணியாளர், ஊழல் அல்லது மோசடி நடவடிக்கையின் மூலம் தவறு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த தவறு நிரூபணம் ஆகும் பட்சத்தில் அவருக்கு நிச்சயம் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
சிறை தண்டனை என்பது எந்தெந்த பிரிவின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுகிறதோ அதற்கு தகுந்த தண்டனைக் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அபராதம் எவ்வளவு என்பதை குற்றம் சாட்டப்பட்டவர் அந்த குற்றத்தை செய்ததன் மூலம் பெற்றிருக்கும் சொத்தின் மதிப்பையும், கணக்கு காட்ட முடியாத சொத்துக்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் நிர்ணயம் செய்யப்படும்.
குற்ற முயற்சிக்கு தண்டனை (பிரிவு 15)
ஊழல் குற்றத்தை செய்ய முயற்சிக்கும் எந்த அரசு பணியாளருக்கும், மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
மு.ர.