மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - 1993 பாகம் - 4

சட்டம்

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - 1993 பாகம் - 4
மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் - 1993

புலன் விசாரணை ( பிரிவு 14 )

மனித உரிமை மீறல் புகார் குறித்த விசாரணைக்காக மத்திய மற்றும் மாநில அரசின் சேவையை ஆணையம் பயன்படுத்திக் கொள்ளும்.

புலன் விசாரணைக்காக சாட்சிகளை அழைத்து விசாரிக்கவும், தேவையான ஆவணங்களைச் சமர்பிக்கவும்,அரசுப் பதிவேடுகளில் இருந்து தேவையான தகவல்களை நகல் எடுக்கவும், எந்த அதிகாரியையும் அழைத்து வாக்குமூலம் பெறவும், புலன் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட அதிகாரியிடம், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அறிக்கை சமர்க்கும்படி கோரவும் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - 1993 - பாகம் - 3

விசாரணை போதும் விசாரணைக்குப் பிறகும் ஆணையத்தின் நடவடிக்கை (பிரிவு 13) Steps during and after inquiry 

விசாரணையின் முடிவில் மனித உரிமை மீறப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்தால் ஆணையமானது

1. பாதிக்கப்பட்ட நபருக்கோ அவர் குடும்பத்திற்கோ தேவையான கருதும் இழப்பீடு அல்லது நஷ்ட ஈடு வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்யும்.

2. மனித உரிமையை மீறிய நபர் மீது குற்ற நடவடிக்கை அல்லது தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

3. பாதிக்கப்பட்ட நபருக்கு உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யும்.

4. விசாரணை அறிக்கையின் நகலை மனுதாரர் அல்லது அவரது பிரதிநிதிக்கு வழங்கும்.

5. விசாரணை அறிக்கையின் நகலை அரசு அல்லது நிறுவனத்திடம் பரிந்துரைகளுடன் வழங்கும்.

6. விசாரணை அறிக்கையையும் அதன் மீது சம்பந்தப்பட்ட அரசு அல்லது நிறுவனம் கொடுத்த விளக்கம் மற்றும் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட இருக்கும் நடவடிக்கை ஆகியவற்றை ஆணையம் வெளியிடும்.

புகார்கள் தள்ளுபடி

1. தெளிவில்லாத புகார்

2. புனைப்பெயரில் கொடுக்கப்பட்ட்ட புகார்

3. மிகச் சிறிய அளவிலான புகார்

4. சொத்துரிமைகள் ஒப்பந்த மீறல்கள்,உரிமையியல் சார்ந்த பிரச்சினைகள்.

5. பணி சார்ந்த விஷயங்கள் ( சர்வீஸ் மேட்டர்) குறித்த புகார்.

6. மனித உரிமை மீறல் இல்லாத குற்றச்சாட்டுகள் மீதான புகார்.

7. தொழில் அல்லது தொழில் தகராறு சம்பந்தமான புகார்.

8. ஆணையத்தின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட புகார்.

மேற்கண்ட வகையில் தரப்படும் புகார்களை மத்திய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் தள்ளுபடி செய்து விடும்.