ஊழல் தடுப்புச் சட்டம் - 1988 Part - 1

Prevention of corruption act

ஊழல் தடுப்புச் சட்டம் -  1988 Part - 1

மத்திய, மாநில அரசு சார்ந்த மற்றும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு மற்றும் பொறுப்புகளில் பணிபுரிபவர்கள், சம்பளம், சன்மானம் போன்ற பணிக்கொடை தவிர்த்து வேறு வகைகளில் தான் வகிக்கும் அரசுப் பணியை மையப்படுத்தி தனி நபரிடம் இருந்தோ அல்லது அமைப்புகளிடம் இருந்தோ ரொக்கமாகவோ அல்லது பொருளாகவோ ஆதாயம் பெறுவது ஊழல் நடைமுறை எனப்படுகிறது.

இத்தகைய ஊழல் நடைமுறையில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவதில் இருந்து தடுக்கவும், குற்றவாளிகளைத் தண்டிக்கவும் பொருட்டு 1988 ல் உருவாக்கப்பட்டது தான் இந்த ஊழல் தடுப்புச் சட்டம்.

அரசு பணியாளர்கள் ( Public servant )  (பிரிவு 2 C ) என்பவர்.

1.அரசுப் பணியில் இருக்கும் அல்லது அதனிடம் சம்பளம் பெறும் அல்லது ஏதேனும் பொதுக்கடமை செய்வதற்காக அரசாங்கத்தால் கட்டணமாகவோ, தரகராகக் கருதி பணி ஊதியம் வழங்கப்படும் நபர்.

2 .உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் இருக்கும் அல்லது அதனிடம் சம்பளம் பெறும் நபர்.

3. மத்திய, மாகாண, மாநில சட்டத்தாலோ, அதன் வழியாலோ நிறுவப்பட்ட இரு கூட்டு அமைப்பு அல்லது அரசு நிறுவனத்தில் அல்லது அரசு நிதியுதவி பெறும் அமைப்பில் சம்பளம் பெறும் நபர்.

4 . நீதி நிர்வாகத்தில் உள்ளவர், நீதிமுறை அலுவல் காரணமாக, சட்டத்தால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்.

5. நீதி மன்றத்தால் அல்லது பொது அதிகார அமைப்பால் முடிவு செய்யப்படுவதற்காக, ஆய்வறிக்கை தயாரிக்க நியமிக்கப்பட்டவர்.

6. தேர்தல் பணிக்காக அதிகாரம் அளிக்கப்பட்டவர்.

7. பொதுக்கடமைக்காக அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்.

8.மத்திய, மாகாண,மாநில சட்டத்தாலோ, அதன் வழியாலோ பதிவு பெற்ற கூட்டுறவு சங்கத் தலைவராக, செயலாளராக இருக்கும் நபர்.

9. பணியாளர் தேர்வாணையம், வாரியம், வாரியத்தின் சார்பு தேர்வு நடத்தும் குழுவின் உறுப்பினர்.

10. பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்.

ஆகிய அனைவருமே அரசு பணியாளர் அல்லது அரசு ஊழியர் என்றே கருதப்படுவார்கள்.

                                                                  தொடரும்