ஆரம்ப பள்ளியில் திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சி.!

தென்காசி

ஆரம்ப பள்ளியில் திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சி.!

நன்னகரம் வெங்கடாசலம் ஆரம்ப பள்ளியில் திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சி

தென்காசி ஜூன் 3

தென்காசி மாவட்டம் நன்னகரம் வெங்கடாசலம் ஆரம்ப பள்ளியில் மேலகரம் பேரூர் திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மேலகரம் பேரூர் கழக திமுக செயலாளர் சுடலை மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன் ஆகியோர் தலைமை வகித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். இந் நிகழ்ச்சிக்கு  மேலகரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவானந்தம், வழக்கறிஞர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சுந்தரம் என்ற சேகர்,சிங்கத்துரை, பொருளாளர் ரமேஷ் குமார், ஒன்றிய பிரதிநிதி ராகவா சுந்தர், பூபதி, அவை தலைவர் சலீம், வீரபாண்டியன், காசி விஸ்வநாதன், குருசாமி, குத்தாலிங்கம், ஆவின் முருகன், கணேசன், பகவதி ராஜ், ஆயிரப்பேரி முத்துவேல், மேலகரம் முருகன், குமாரவேல், ஆறுமுகசாமி, விக்னேஷ், பார்த்திபன், அருண், நன்னை மாரி, சந்திரன், மனோகரன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்