குற்றாலம் பேரூர் திமுக சார்பில் கலைஞர் பிறந்த நாள் நிகழ்ச்சி.!
தென்காசி

குற்றாலம் பேரூர் திமுக சார்பில் கலைஞர் பிறந்த நாள் நிகழ்ச்சி
தென்காசி ஜூன் 3
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூர் திமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர், டாக்டர் கலைஞர் மு. கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் நிகழ்ச்சி குற்றாலம் அண்ணா சிலை அருகில் இன்று நடை பெற்றது. இந் நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை வகித்து அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து
மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.
இந் நிகழ்ச்சிக்கு தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், குற்றாலம் பேரூர் கழக செயலாளர் சங்கர் என்ற குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் கழக துணை செயலாளர் மாரியப்பன் என்ற கருணாநிதி வரவேற்புரை ஆற்றினார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கென்னடி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா,
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ்வரன்,பொன்சீலன், துரை, ஆனந்த், சுடர்பழனி, மந்திரமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமையா என்ற துரை, அவைத் தலைவர் மாடசாமி பாண்டியன், துணை செயலாளர் முருகன், பொருளாளர் சுரேஷ், வார்டு செயலாளர்கள் பால்ராஜ், சுரேஷ், முத்துக்குமார், சக்தீஷ் கணேஷ், நாராயணன், திருமலைக்குமார், குத்தாலிங்கம், வள்ளிநாயகம், ராமர், சுப்புராஜ், பாண்டி சுரேஷ்,நெல்லை முத்துமாரி, சோமசுந்தரம், பண்டாரசிவன்,காசிமேஜர்புரம் நீலகண்டன், அறங்காவலர்கள் வீரபாண்டியன், சுந்தர்ராஜ், ஆட்டோ தொ மு ச மாரியப்பன், காசிமேஜர்புரம் குத்தாலிங்கம், ஒன்றிய இளைஞரணி கொக்கி குமார், தொழிலாளர் அணி முத்துக்குமார்,
உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் 5வது வார்டு பொறுப்பாளர் சக்தீஷ் கணேஷ் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்