மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம்.!

தென்காசி

மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம்.!

தென்காசியில் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம்

தென்காசி மே 14


தமிழ்நாடு மின்  பகிர்மான கழகத்தின் சார்பாக திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் தென்காசி கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் தென்காசியில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில்  ‌ நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை  பொறியாளர் அகிலாண்டேஸ்வரி ,  கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் தென்காசி கோட்டம் திருமலை குமாரசாமி  மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். இந் நிகழ்ச்சியில் தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து  மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை  பொறியாளர் பேசும் போது கோடை காலத்தில் ஏற்படும்  இயற்கை இடர் பாடுகளான திடீர் சூறைக்காற்று, இடி, மின்னல், பெரும் மழையால், மின் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக போர்க்கால அடிப்படையில் சரி செய்து சீரான மின் விநியோகம் வழங்குவதற்கும், மின் பாதைகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்து மரக்கிளைகளால்  மின் தடங்கல் ஏற்படும் என தெரிய வந்தால்  பாதுகாப்பு கருதி மின் விநியோகத்தை நிறுத்தி உடனடியாக மரக்கிளைகளை அப்புறப்படுத்துவதற்கும், அந்த பகுதியில் உள்ள மின் பாதைகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்யவும், விவசாய மின் இணைப்புகளை தொடர் ஆய்வு மேற்கொண்டு மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மின் துண்டிப்பு செய்து காவல்துறை உதவியுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்கவும், அனைத்து மின் இணைப்புகளையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வாரிய விதி முறைகளுக்கு முரணாக இருந்தால் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வருவாய் இழப்பீட்டை தடுப்பதற்கும், தென்காசி கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்கவும், வருங்கால மின் நுகர்வை கருத்தில் கொண்டு புதிய மின் மாற்றிகள் அமைப்பதற்கும் உத்தரவிட்டார்.

செய்தியாளர்

AGM கணேசன்