மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி எம் எல் ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.!
கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 500-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி எம் எல் ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி, வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட திமுகவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நெடுசாலை எம் ஆறுமுகம் தலைமையில், ஓபிஎஸ் அணியச் சேர்ந்த வீரோஜிபள்ளி மகேஷ், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சேகர், நெடு சாலை டிராவல்ஸ் மாதேஸ், பலராமன் உள்ளிட்ட முக்கிய மாற்றுக் கட்சி நிர்வாகிகள் தலைமையில் இன்று ஆண்கள் மற்றும் பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் திமுக பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சியிலிருந்து விலகி அதிமுக துணை பொதுச்செயலாளர், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் திரு, கே.பி முனுசாமி எம்எல்ஏ அவர்கள் முன்னிலையில் தங்களை, அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
மாற்றுக் கட்சியிலிருந்து புதிதாக தங்களை இணைத்துக் கொண்ட அனைவரையும் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே பி முனுசாமி அவர்கள் இன்முகத்தோடு வரவேற்று அனைவருக்கும் சால்வை மற்றும் கட்சி துண்டு அணிவித்து அனைவருக்கும் வேட்டி மற்றும் புடவைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சைலேஷ் கிருஷ்ணன், கேடிஆர், முன்னாள் கவுன்சிலர் ,எல்லப்பன்,மாரசந்திரம் சந்திரன், நரணி குப்பம் அப்பாதுரை, ராஜேந்திரன், சின்ன முனியப்பன், முன்னாள் தலைவர் முருகேசன், கொரல் நத்தம் பொன்னுசாமி உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ