பெங்களூருவை மையமாகக் கொண்டு வட்ட ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு நிலம் எடுப்பதற்கான பணிக்கு நன்றி தெரிவித்த தம்பி துரை .!

கிருஷ்ணகிரி

பெங்களூருவை மையமாகக் கொண்டு வட்ட ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு நிலம் எடுப்பதற்கான பணிக்கு நன்றி தெரிவித்த தம்பி துரை .!

பெங்களூருவை மையமாகக் கொண்டு வட்ட ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு நிலம் எடுப்பதற்கான பணியில் தமிழகத்தை தவிர்த்து மாற்று ஏற்பாட்டுடன் திட்டத்தை நிறைவேற்ற திட்ட அறிக்கை தயாரித்து வழங்க உத்தரவிட்ட மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கும், எதற்காக பெரு முயற்சி மேற்கொண்ட அதிமுக எம்பி டாக்டர் மு தம்பிதுரைக்கு விவசாயிகள் சார்பில் நன்றி.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு, சென்னராயப்பட்டினம் பகுதி வரை சுமார் 241 கிலோமீட்டர் அளவிலான வட்ட ரயில் பாதை அமைக்கும் திட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக ரயில்வே துறை ஒப்பந்ததாரர் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆர்வி அசோசியேட்ஸ் குழுவினர் கர்நாடக மாநிலம் ஆனைக்கல் மாலூர் மற்றும் தமிழக பகுதியான பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் திட்ட அறிக்கை தயாரிக்கும் நோக்கத்தில் நில அளவீடு பணிகளை மேற்கொண்டு வந்தது. 

இந்த நிலையில் தமிழகத்தில் பாகலூரை ஒட்டிய பகுதிகளில், சுமார் 21.2 கிலோமீட்டர் தொலைவிற்கு நிலம் எடுப்பதற்காக அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதனை அடுத்து சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் இதனால் கையகப்படுத்தும் நிலைமை உள்ளதால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி விவசாயிகள் நிலங்களை வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். 

மேலும் இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பி பால கிருஷ்ணா ரெட்டி தலைமையில் விவசாயிகள் குழுவானது, மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு, அதிமுக மாநிலங்களவை எம் பி எம் கொள்கை பரப்புச் செயலாளருமான முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் மு தம்பிதுரை வாயிலாக பிப்ரவரி மாதம் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோரிக்கை மனுவை அளித்திருந்தனர். 

இந்த மனுவை பரிசீலனை செய்து இதற்கான மாற்று ஏற்பாடுகளை ரயில்வே துறை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி இடம் டாக்டர் மு தம்பிதுரை கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய ரயில்வே துறை, இந்த வட்ட ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு ஏற்கனவே தமிழகப் பகுதிகளில் நிலங்களை எடுப்பதற்கான வரைபட மற்றும் நில அளவீடுகள் பணியை நிறுத்து வேண்டும் என்றும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு கர்நாடக மாநிலத்திற்கு உள்ளேயே வட்ட ரயில் இருப்புப் பாதை அமைக்கும் பணியை மேற்கொள்ள ஏதுவாக தென்மேற்கு ரயில்வே இணை தலைமை பொறியாளர், திட்டத்திற்கான ஒப்பந்ததாரருக்கு ஆணைகள் பிறப்பித்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. 

இதனால் மகிழ்ச்சி அடைந்த தமிழக விவசாயிகள் தங்களின் கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் ஏற்றுக் கொண்டதற்கு பெரு முயற்சி மேற்கொண்ட அதிமுக மாநிலங்களவை எம் பி யும், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் மு தம்பிதுரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் சார்பில் பொன்னாடை அணிவித்து பூங்கொத்து வழங்கி நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். அப்பொழுது முன்னாள் அமைச்சரும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பி பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பாகலூர் விவசாயிகள் சங்கத்தில் தலைவர் ரவி பாலாஜி குமாரா, செயலாளர் மாதேஷ்,பொருளாளர் மஞ்சு,அம்பரேஸ், வினை, புனித்,சுமன்,மஞ்சுநாத், அஸ்வத்,  நாராயணசாமி, நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் மதன், பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், தொழில் சங்கம் மாவட்ட செயலாளர் சீனிவாசன்,இலக்கிய அணி மாவட்ட செயலாளர் இளஞ்சூரியன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்ன கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்,.

செய்தியாளர்

மாருதி மனோ