ஜமீன் பல்லாவரத்தில் 40 சென்ட் நிலத்தை தனியார் அமைப்பு ஒன்று மிரட்டல் விடுத்து நிலத்தை அபகரிக்க முயல்வதாக புகார். !
செங்கல்பட்டு
வீடியோ உள்ளடக்கியது
ஜமீன் பல்லாவரத்தில் 40 சென்ட் நிலத்தை தனியார் அமைப்பு ஒன்று மிரட்டல் விடுத்து நிலத்தை அபகரிக்க முயல்வதாக பாதிக்கப்பட்டவர்கள் தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் புகார்.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் மாநகர காவல் அலுவலகத்தில், ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த பவுன்(75), என்ற வயதான மூதாட்டி தங்களது பூர்வீக நிலத்தை தி சவுத் இந்தியன் அசெம்பிளி ஆஃப் காட் நிறுவனம் அபகரிக்க முயல்வதாகவும், இடத்தை காலி செய்ய சொல்லி மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளனர்.
அப்புகார் மனுவில் எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஜமீன் பல்லாவரம் ரேடியல் சாலையில் 80 சென்ட் இடம் பூர்வீகமாக இருந்ததாகவும், அதனை சரிபாதி 40 சென்டாக பிரித்து எங்களின் பங்கு கொடுக்கப்பட்டது.
அதில் 40 சென்ட் நிலம் எங்களது அனுபவத்தில் இருந்து வருகிறது ஒரு குடிசை வீடு கட்டி வசித்து வருகிறோம்.
இந்த இடத்திற்கான கூட்டு பட்டா தனது மற்றும் பெரியம்மா பேரன் சுரேஷ் குமார் ஆகியோர் பெயரில் இருப்பதாகவும், தற்போது தி சவுத் இந்தியன் அசெம்பிளி ஆஃப் காட் நிறுவனத்தை சார்ந்த மோகன், அவரது மனைவி கெட்சியால், அவரது மகன் சாட்விக் ஆகியோர் போலி ஆவணம் மூலம் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மூலம் கடந்த 05-06-2025ம் தேதி எங்கள் நிலத்திற்கு அவர்கள் நிறுவனம் பெயரில் பட்டா பெற்றுள்ளனர்.
அந்நிறுவனத்தை சார்ந்தவர்கள் தொடர்ந்து என்னையும் எனது குடும்பத்தையும் மிரட்டி வெளியேற்றவும், நிலத்தை அபகரிக்கவும் முயற்சி செய்து வருகின்றனர்.
அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்தை மீட்டுக் கொடுக்கும்படி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரளித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்து இந்த நிலத்தில் நாங்கள் பூர்வீகமாக் இருந்து வருவதாகவும், 2018ம் ஆண்டு பட்டா பெற்று வசித்து வரும் நிலையில் எங்களை மிரட்டி காலி செய்ய முயலும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருப்பதாக தெரிவித்தனர்.
பேட்டி:- 1), பவுன் ( நிலத்தின் உரிமையாளர், புகார்தாரர்)
2), புஷ்பா ( புகார்தாரரின் மகள்)
செய்தியாளர்
S S K