தற்காப்பு கலை பயிற்சி பள்ளிகள் இணைந்து நடத்திய தேசிய அளவிலான தி ரிங்சாம்பியன் 2025 போட்டி. !
செங்கல்பட்டு
சோழிங்கநல்லூரில் அனைத்து தற்காப்பு கலை பயிற்சி பள்ளிகள் இணைந்து நடத்திய தேசிய அளவிலான தி ரிங்சாம்பியன் 2025 மாபெரும் போட்டி.!
இளம் வீரர்களை பாராட்டிய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ்.!
தேசிய அளவிற்கான ரிங் சாம்பியன்
போட்டி கைலாஷ் கார்டனில் சோழிங்கநல்லூரில் எம். எல். எம். அகாடமியின் தலைவர் கிராண்ட் மாஸ்டர் அனிபா மற்றும் அனைத்து தற்காப்பு கலை மாஸ்டர்கள் சேர்ந்து நடத்திய போட்டிகள் நடைபெற்றது .
இப்போட்டியில் பல்வேறு வகையான குங்பூ பிரிவுகள்,டேக் வொண்டோ, கலை தங் சூடோ ஆல் இந்தியா தங்சூடோ அசோசியேசன், ஒயிட் டிராகன் கராத்தே, தற்காப்பு கலை சார்ந்த அமைப்புகள் கலந்து கொண்டன.
சுமார் 400க்கும் மேற்பட்ட கலையில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இயங்கிவரும் தமிழ்நாடு ஃபயர் டேக்வாண்டோவின் தலைமை மாஸ்டர் எட்வின், சேர்மன் செங்கை ஆனந்தன், டிரஸ்டி ஜெரி மேக் வின் , டீம் மேனேஜர் எழில் தலைமையில் மானாமதி குன்னப்பட்டு மற்றும் செம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் பயின்று வரும் சுமார் 15 மாணவிகள் கலந்து கொண்டனர் .
நடைபெற்ற போட்டியில் 7, மாணவிகள் முதலிடத்தை கைப்பற்ற. 2வது இடத்தை ஓரு மாணவியும் 3ஆம் இடத்தை தலா ஓரு மாணவர், மாணவியும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களான சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ், பாலவாக்கம் க.சோமு, ஆகியோர் போட்டி ஏற்பாட்டாளர்களையும்,வீரர்களையும்,
மற்றும் கலந்துகொண்ட டேனியல் அதிஷ்ட குமார், சி.இ.ஓ.தி கிங்ஸ் இன்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமி,பெசன்ட் ரவி திரைப்பட நடிகர்,அரவிந்த் செராமிக்ஸ் அண்ட்
டைல்ஸ் பிரைவேட்லிமிடெட்., திருக்கழுக்குன்றம் தொழிலதிபர் பிரபு,
மாமல்லபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜி ராகவன், திரைப்பட நடிகர் லிங்கேஸ்வரன் , மூத்த வழக்கறிஞர் செங்கல்பட்டு ஏ.கே.சொக்கலிங்கம், தொழிலதிபர் தையூர்ராஜா, ஆகியோரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துப் பேசினர்.
இதுகுறித்து திருப்போரூரில் இயங்கி வரும் தமிழ்நாடு ஃபயர் டேக்வாண்டோ தலைமை பயிற்சியாளர் எட்வின் கூறுகையில் இந்தியாவில் முதல்முறையாக அனைத்து தற்காப்புகலை கிராண்ட் மாஸ்டர்கள் இணைந்து நடத்தும் முதல் தேசிய போட்டி இதுதான் என தெரிவித்ததுடன் எல்லோரின் உழைப்பும் அனைத்தையும் ஏற்பாடு செய்த கிராண்ட் மாஸ்டர் அனிபா மற்றும் அவருடன் சேர்ந்து இவ்விழாவிற்கு தோள் தாங்கிய அனைத்து கிரான் மாஸ்டர்கள் அனைவருக்கும்
என் மனமார்ந்த நன்றியையும்
பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறினார்.
செய்தியாளர்
சுகுமாரன்