திருமா எந்த பக்கமோ அந்தப் பக்கம் தான் வெற்றி. ! பல ஸ்டார்கள் தமிழ்நாட்டில் வளம் வந்தாலும் அம்பேத்கர் தான் உயர்ந்த ஸ்டார் என திருமாவளவன். !

வி சி க

திருமா எந்த பக்கமோ அந்தப் பக்கம் தான் வெற்றி. ! பல ஸ்டார்கள் தமிழ்நாட்டில் வளம் வந்தாலும் அம்பேத்கர் தான் உயர்ந்த ஸ்டார் என திருமாவளவன். !

சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், பவர் ஸ்டார் என பலரும் உள்ள நாடு தமிழ்நாடு. ஆனால் இவர்களை எல்லாம் தாண்டியவர் தான் அம்பேத்கர் என திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எந்தப் பக்கம் உள்ளனரோ அந்த பக்கம் தான் வெற்றி என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சியில் நடந்த பேரணியில் கலந்துகொண்ட பொது அவர் பேசியதாவது: அனைவரும் தேர்தல் கணக்குகளை பற்றியும், எத்தனை இடங்களை பற்றியும், யார் முதல்வர் என்பது பற்றியும் பேசி கொண்டு உள்ளனர். நமக்கு அந்த கவலையில்லை. சிலர், திருமாவளவனுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை. பேரம் பேச தெரியவில்லை. மிரட்ட தெரியவில்லை. துணை முதல்வர் வேண்டும் என கேட்க மறுக்கிறார். முதல்வர் பற்றியே கவலைப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அம்பேத்கர், பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள் என வழிகாட்டி உள்ளார். அது தான் அதிகாரம் உள்ள பதவி . அது தான் அரசு. எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது திருமாவளவனுக்கு, விடுதலை சிறுத்தைகளுக்கு தெரியும் என்று அவர் பேசியுள்ளார். மேலும், மற்றவர்களின் அறிவுரை தேவையில்லை என்றும், 10 ஆண்டுகள் தேர்தல் அரசியல் புறக்கணிப்பு செய்தோம். 25 ஆண்டு தில்லு முல்லு அரசியலில் தாக்கு பிடித்து நிற்கிறோம். சம களத்தில் எங்களுடன் வந்தவர்களை காணவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கொடியேற்ற முடியவில்லை. பொதுக்கூட்டம் நடத்த முடியவில்லை. பேரணி நடத்த முடியவில்லை. மாநாடு நடத்த முடியவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக இவ்வளவு நெருக்கடி உள்ளது. இவ்வளவு நெருக்கடியை தாண்டி நிற்கிறோம் என்று திருமா கூறியுள்ளார்.

மேலும், திமுக.,வை ஆதரிக்கவில்லை என்றால் என்ன ஆகிவிடும். எங்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைக்கு வரப்போகுதா? என்ன செய்ய முடியும்? எனவும், மத்திய அரசாலும் மாநில அரசாலும் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் எதற்காக யாருக்காக பயப்பட வேண்டும். எங்களுக்கு என்ன நெருக்கடி.? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், எங்களை ஓரங்கட்ட பார்த்தாலும், ஒதுக்க பார்த்தாலும், நாங்களே மையமாக மாறுவோம். இது தான் எங்களின் அரசியல் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் தி.மு.க., உடன் உள்ள உறவு கொள்கை உறவு என்றும், தி.மு.க.,வுக்கும் எங்களுக்கும் உள்ள விமர்சனத்தை தாண்டி தேர்தல் உறவை வைத்து கொண்டோம் என்றால், அது தொலைநோக்கு பார்வையுடன் கூடிய கொள்கை முடிவு என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், பா.ஜ.,வின் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த பலர் பல வேஷம் போடுகின்றதாகவும், சில பேர் சினிமா புகழோடு ஹீரோ என்ற வேஷத்துடன் வந்துள்ளனர் என்று விமர்ச்சித்துள்ளதோடு, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சினிமா பின்னால் சினிமா ஹீரோக்கு பின்னால் செல்வார்கள் என சொல்கின்றனர். வெறும் சினிமா விளம்பரம் அல்லது புகழை நம்பி நீங்கள் ஏமாற மாட்டீர்கள். அம்பேத்கரை நம்பிய எவனும், எந்த விளம்பர மோகத்துக்கும் அடி பணிய மாட்டான் என்று பேசியுள்ளார்.

மேலும், சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், பவர் ஸ்டார் அனைவரும் தமிழகத்திற்குள் தான். அம்பேத்கர் இவர்களை தாண்டிய ஸ்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எந்தப் பக்கம் உள்ளனரோ அந்த பக்கம் தான் வெற்றி. ஆட்சி அதிகாரம். இதனை யதார்த்தத்காக சொல்கிறேன். தேர்தலை பற்றி கவலைப்படாமல் தேசத்தை பற்றி கவலைப்படுகிறது என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எல்லாவற்றையும் விட முதன்மையானது தேசம் என்றும், 2026 தேர்தல், பேரம், வெற்றி தோல்வியை விட கூட்டணி கணக்குகளை விட தேசம் முதன்மையானது. அந்த தேசத்தை கட்டமைக்க வேண்டும் என்றால், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த பேரணியில் திருமாவளவன் பேசியுள்ளார்