கிருஷ்ணகிரியில் பட்ட பகலில் நாடக ஆசிரியர் வெட்டிக் கொலை .!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பட்ட பகலில் நாடக ஆசிரியர் வெட்டிக் கொலை .!

கிருஷ்ணகிரியில் பட்ட பகலில் நாடக ஆசிரியர்  விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது,

கிருஷ்ணகிரி நகரம், ஐந்து ரோடு வழக்கம் போல மக்கள் கூட்டத்துடன் பரப்பரப்பாக காணப்பட்டது, இந்த நிலையில் இரு சக்கர வண்டியில் வந்துக் கொண்டு இருந்த நபரை 45 வயது மதிக்கத்த ஒருவர் வழிமறித்து சரமாரியக வெட்டி சாய்த்துள்ளார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தினை கொஞ்சமும் எதிர்பாகத நிலையில் இரத்த வெள்ளத்தில் சாலையில் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அப்போது ரவுண்டான அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் சம்பவ இடதிற்கு விரைந்து வந்து இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நபரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவ 
மனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் போகும் வழியிலேயே பரிதாபமாக அவர் பலியானர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி வி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொள்ளனர். மேலும் இந்த விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஜேசுப்பள்ளியை சேர்ந்த கிராமிய நாடக ஆசிரியர்  வெங்கடேஷன் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் வெங்கடேசனை வெட்டி சொலை செய்த நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதை அடுத்து காவல் துறையினர் கைது செய்த தொடர்ந்து காவல் துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையில் போலிசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளதோடு சாலை யேராம் கடைகளில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி.கேமராவில் பதிவான காட்சிகள் குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர்

எந்த நேமும் மக்கள் நடமாட்டம் மட்டுமின்றி காவல் துறையினர்களின் நடமாட்டம் உள்ள  பகுதியில் ஒருவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் மீதியை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்

மாருதி மனோ