அஞ்சூர் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் .!

கிருஷ்ணகிரி

அஞ்சூர் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் .!

அஞ்சூர் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ் துவக்கி வைத்தனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் பயன் பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

அஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்ற இந்த முகாமினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினரும், திமுக ஒன்றிய செயலாளருமான அறிஞர் ஆகியோர் கலந்துக் கொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை  குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அஞ்சூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமில் அனைத்து அரசு துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

மேலும் இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் நூறு நாள் வேலை,கலைஞரின் மகளீர் உரிமைத் தொகை, வீட்டுமனைப் பட்டா, இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம், கல்வி கடன், ரேசன் அட்டை , குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்வு காண வேண்டி துறை வாரியாக மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கினார்கள். மேலும் இந்த சிறப்பு முகாமில் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது,

மக்கள் பயன் பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், வட்டாச்சியர் மோகன்தாஸ், பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் மற்றும் திமுகவை சேர்ந்த குப்பு சாமி,கண்ணப்பன், தங்கமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாருதி மனோ