எருதுவிடும் விழாவினை திமுக சட்டமன்ற உறுப்பினர்.!
கிருஷ்ணகிரி

கும்மனூர் கிராமத்தில் நடைப்பெற்ற எருதுவிடும் விழாவினை திமுக சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் பொங்கல் பண்டிகை மற்றும் கோவில் திருவிழாக்கள் முன்னிட்டு எருது விடும் திருவிழா இறுதிக் கட்டத்தினை நெருங்கி உள்ள நிலையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள கும்மனூர் கிராமத்தில் 8-ம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழா நடைபெற்றது,
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திமுக சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்,
மேலும் இவ்விழாவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஒசூர், ராமக்கோட்டை,
காவேரிப்பட்டினம், பர்கூர், ஒரப்பம், ஊத்தங்கரை, வேலூர், திருப்பத்தூர், மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றிருந்தன,
அரசின் வழிக்காட்டுதலின்படி நடத்தப்பட்ட இந்த எருது விடும் விழாவில் கலந்துகொண்ட அனைத்து எருதுகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு எருதுகளாக அவிழ்த்து விடப்பட்டது.
இதில் 120 மீட்டர் தூரத்தை மிக குறைந்த நேரத்தில் விரைவாக கடந்த எருது உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 60 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ 50 ஆயிரம் என 101 பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவிழ்ந்து விடப்பட்ட எருதுகளை இளைஞர்கள் தட்டி உற்சாகப்படுத்தியதோடு விழாவினை உற்சாகத்துடன் கண்டுக்களித்தனர்,
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் மற்றும் கும்மனூர் கிராமத்தை சேர்ந்த விழா குழுவினர்கள்
சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்