ஒரே நாளில் 3 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.!

குற்றம்

ஒரே நாளில் 3 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.!

ஒரே நாளில் 3 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.!

தென்காசி மே 30

தென்காசி மாவட்டம், சின்ன கோவிலாங் குளம் காவல்  நிலைய கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  குற்றவாளிகளான ஊத்தங்குளம் ஆதிமூலம் @ தங்கதுரை என்பவரின் மகன் தினேஷ்(25), கீழக்கலங்கல்  கீழத் தெருவை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவரின் மகன் சிவசக்தி மற்றும் செங்கோட்டை  காவல் நிலைய திருட்டு  வழக்கின் குற்றவாளியான மேலூர்
செங்கோட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பீர்முகமது என்பவரின் மகன் முஸ்தபா கமால் (33)  ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அரவிந்த்  பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர்   உத்தரவின் பேரில் மேற்படி 3 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்