மா உற்பத்தி முத்தரப்பு பேச்சுவார்த்தை இரண்டாவது கூட்டம்.!.
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயிகளுக்கு மாவிலை நிர்ணயம் செய்வதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் மா உற்பத்தி முத்தரப்பு இரண்டாவது கூட்டம் இன்று நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பல்வேறு வகையான கோரிக்கைகள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அரசுக்கு வைக்கப்பட்டது. அதில் மா வுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், அண்டை மாநில மா வரத்தை தடுக்க வேண்டும், இந்த ஆண்டில் அரவைக்கு வராத மாம்பழக் கூழ் தொழிற்சாலைகள் 17 இருக்கின்றன. அவைகளும் அரவைக்கு கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.
வெளி மாவட்ட மா வுக்கு ஒரு விலையும், உள் மாவட்ட மா வுக்கு ஒரு விலையும், தொழிற்சாலைகள் வைப்பதை நிறுத்தி சீரான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மாங்காய் வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும். இயற்கை சீற்றம் காற்று ஆலாங்கட்டி மழையால் பாதிக்கப்படும் போது அந்த விவசாயிகளுக்கு இயற்கை சீற்றமாக இழப்பீடு வழங்க வேண்டும். கிருஷ்மா நிறுவனத்தை மீண்டும் தொடங்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்ட மாவுக்கு முன்னுரிமை கொடுத்து தொழிற்சாலைகள் வாகனங்கள் இருந்து மாங்காய் இறக்க வேண்டும்.
போலி மருந்துகளுக்கு தடை செய்ய வேண்டும் அவைகள் இருப்பதை ஆய்வு செய்து அவர்களை கைது செய்யவேண்டும். வேளாண் சார்ந்த அந்த மாம்பழக் கூழ் தொழிற்சாலைகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்க வேண்டும். இந்த தொழிற்சாலை வேளாண் சார்ந்தது என்பதால் அவர்களுக்கு உண்டான வரியையே நீக்க வேண்டும். ஆக இதெல்லாம் வலியுறுத்த வேண்டும், இதை வலியுறுத்தி பேசுவதற்காக மாண்புமிகு தமிழக முதல்வரால் தான் இதை செய்ய முடியும்.
ஆகவே முதல்வரிடத்தில் நேரிலே பேசுவதற்கு உண்டான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதன் மூலம் வைத்துள்ளோம்.
இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.எம்.இராமகண்டர், மா நர்சரி உரிமையாளர் சங்கத்தின் கன்னையா, மாவட்ட இளைஞரணி து.செயலாளர் அனுமந்தராஜ், கோவிந்தராஜ், வரதராஜ், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ