துரை மாடர்ன் பள்ளி (சிபிஎஸ்இ) யில் (Drawing Symphony 1.0) ஓவிய போட்டி -2025 .!
கிருஷ்ணகிரி

துரை மாடர்ன் பள்ளி (சிபிஎஸ்இ) யில் (Drawing Symphony 1.0) ஓவிய போட்டி -2025
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி தண்ணீர்ப்பள்ளம், துரை மாடர்ன் பள்ளி (சி பி எஸ் இ) சார்பாக மாணவ மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடைபெற்றது. அதில் பள்ளித் தாளாளர் ம.சத்தியமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார் . நிர்வாக இயக்குனர் அ.சிந்து வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராக பள்ளி நிறுவனர் து.மணி அவர்கள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்து கூறினார். சிறப்பு விருந்தினராக குழந்தைகள் நல குழுமம் உறுப்பினர் அ. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இவ்ஓவியபோட்டியில 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர் அதில் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு முதல் கட்டமாக எல்கேஜி முதல் ஒன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல் பரிசு ஸ்கூல் பேக் இரண்டாம் பரிசு லஞ்ச் பேக் மூன்றாம் பரிசு பிளாஸ்க் வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு பைசைக்கிள் இரண்டாம் வகுப்பு ப்ளூடூத் ஸ்பீக்கர் மூன்றாம் பரிசு ரைட்டிங் டெஸ்க் வழங்கப்பட்டது
மூன்றாவது கட்டமாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ட்ராலி பேக் இரண்டாவது பரிசாக ஸ்மார்ட் வாட்ச் மூன்றாவது பரிசாக ட்ராவல் பேக் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பள்ளி முதல்வர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் வாழ்த்து கூறினார்.
விழாவை ஏற்பாடுகளை ஆசிரியை ஆசிரியர்கள் செய்தனர். விழா முடிவில் ஆசிரியர் மர்ஜியா நன்றி உரை கூறினார்.
செய்தியாளர்
மாருதி மனோ