ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பயிற்சி பாசறை கூட்டம் .!
கிருஷ்ணகிரி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, கழக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையின்படி, "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பயிற்சி பாசறை கூட்டம் கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி, கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியம், மாதேப்பட்டி சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.
இந்த பாசறை கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன், MLA அவர்கள் கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கையின் செயல் திட்டம் குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில், வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ.