ராமநதி அணையின் பாதுகாப்பு கருதி அணை திறப்பு .!

தென்காசி

ராமநதி அணையின் பாதுகாப்பு கருதி அணை திறப்பு .!

ராமநதி அணையின் பாதுகாப்பு கருதி அணை திறப்பு

பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லமாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்


தென்காசி ஜுன் 15

இராம நதி அணையின்  பாதுகாப்பு கருதி அணையின் உள் வரத்து முழுவதும் உபரி நீராக அணையின் கட்டுப்படுத்தப்பட்ட மதகுகளின்   வழியாக இராம நதி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.   இராம நதி ஆற்று தண்ணீர் தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலக்கடையம், கீழக் கடையம், ரவண சமுத்திரம்,பொட்டல் புதூர், பாப்பான் குளம் கிராமங்கள் வழியாக தென்காசி மாவட்டத்தில் உள்ள சந்தியாமடம் பகுதியில் உள்ள  கடனா ஆற்றில் கலக்கிறது. எனவே ராமநதி கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் செய்ய வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப் படுகிறது.