கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக்குழு கூட்டம் .!
தென்காசி

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தென்காசி ஜூன் 15
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தவ்ஹீத் நகர் பள்ளி வாசலில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சிவகங்கை முகமது ரபிக் மற்றும் மாவட்ட தலைவர் அப்துல் சலாம், செயலாளர் ஜலாலுதீன், பொருளாளர் சாதிக், துணைத் தலைவர் அப்துல் பாசித், துணைச் செயலாளர்கள் காஜா மைதீன், புளியங்குடி பிலால், வடகரை சையது அலி, அப்துல் பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் முகமது ரபிக் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் தென்காசி கடையநல்லூர் புளியங்குடி சங்கரன்கோவில் வீராணம் அச்சன்புதூர் வடகரை முதலியார் பட்டி வாவா நகரம் விஸ்வநாதபுரம் இரவிய தர்மபுரம் பொட்டல்புதூர் மாலிக் நகர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 33 கிளை பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மாநில தலைமை அறிவித்துள்ள முன் மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் என்கிற நான்கு மாத செயல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.இந்த பொதுக்குழுவில் மதுரையில் அக்டோபர் 5ல் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இளைஞர்கள் எழுச்சி மாநாட்டில் மாவட்டம் முழுவதிலிருந்தும் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வது என்றும், அகமதாபாத்தில் நடந்த விமான விபத்திற்கான விரிவான காரணத்தையும் வழிமுறைகளையும் ஒன்றிய அரசு விரைந்து வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
முடிவில் புளியங்குடி பிலால் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்