குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் 7 நாள்களுக்கு பிறகு இன்று குளிக்க அனுமதி.!
குற்றாலம்

குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் 7 நாள்களுக்கு பிறகு இன்று குளிக்க அனுமதி
தென்காசி ஜுன் 01
தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 7 நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது தற்போது குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறைந்துள்ள காரணத்தினால் இன்று அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க சற்று முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அருவிகளில் கூட்டம் குறைவாகவே உள்ளது. அனைத்துஅருவிகளிலும் மாவட்ட நிர்வாகம் குளிப்பதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் பொது மக்கள் ஆனந்தமாய் குளித்து வருகின்றனர்.
செய்தியாளர்
AGM கணேசன்