தென்காசியில் பணி நிறைவு பாராட்டு விழா .!

தென்காசி

தென்காசியில் பணி நிறைவு பாராட்டு விழா .!

தென்காசியில் பணி நிறைவு பாராட்டு விழா

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் நடைபெற்றது

தென்காசி மே 07

2024-25 ஆம் கல்வி ஆண்டில் பணி நிறைவு பெறும் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்,மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பணி நிறைவு பாராட்டு விழா தென்காசி மாவட்டம், இலஞ்சி தனியார் பள்ளியில் வைத்து இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஹென்றி ராஜ்குமார் வரவேற்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து வரவேற்பு நடனம், மற்றும் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு ஜெயலட்சுமி, இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், வேதம்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ் ராஜன், மாவட்ட கல்வி அலுவலர் அமலா தங்கத்தாய், மாரிமுத்து மற்றும் பணி நிறைவு பெறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்கள், ஏற்புரை வழங்கினர். பணி நிறைவு பெறும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயபிரகாஷ் ராஜன், அமலா தங்கத்தாய், மாரிமுத்து, வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், தலைமை ஆசிரியர்கள் கிருபைக்கனி, செல்லபாண்டியன், ஞானராஜ், ராஜகோபால், ராதா, தேவதாசன், 
சுந்தர் சிங், ஷாஜகான், மனோகரன், அல்போன்ஸ் அமலா ராணி, கோவிந்தராஜன், தங்கம், லிங்கம், செல்லையா, வசந்தி ஜான்சி ராணி, செல்வராஜ், எலிசபெத், ஹெலன் கிருபா, கண்ணன் ஆகியோருக்கு சந்தன மாலை அணிவித்து பாராட்டு பதக்கமும் வழங்கப் பட்டது.

இந் நிகழ்ச்சியில் இலஞ்சி பள்ளி ஆசிரியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில்கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமலதா நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்