அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் மற்றும் பாரத் உடற் பயிற்சி கழகம் சார்பில் மிஸ்டர் தென்காசி போட்டி..!
தென்காசி

தென்காசி மாவட்ட அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் மற்றும் பாரத் உடற் பயிற்சி கழகம் சார்பில் மிஸ்டர் தென்காசி போட்டி.
தென்காசி, ஏப் :- 29
தென்காசி மாவட்ட அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் மற்றும் பாரத் உடற் பயிற்சி கழகத்தின் 46வது ஆண்டு விழாவை முன்னிட்டும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் மிஸ்டர் தென்காசி ஆணழகன் போட்டி நடைபெற்றது.
தனியார் திருமண மண்டபத்தில் அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் செயலாளர் குத்தாலிங்கம் வரவேற்புரையுடன் போட்டியை அசோசியேசன் தலைவர் பூங்குன்ற வேலாயுதம் சௌந்தர்யா டவர் உரிமையாளர் சுப்பிரமணியன் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
இந்த போட்டியில் நடுவர்களாக போஸ், சுதன், வீரக்குமார், அஷார், முருகபெருமாள், ராம்சங்கர், சபரி,ஆகியோர் கலந்துகொண்டனர் 50, 55, 60, 65, 70, 75, 80, ஆகிய உடல் எடை பிரிவுகளில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட உடற்பயிற்சி கூடங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டழகு இளைஞர்கள் கலந்துகொண்டு தங்களது கட்டுடல் அழகை காண்பித்து அசத்தியவர்களை தேர்வு செய்தனர்.
தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே கமல் கிஷோர் கலந்து கொண்டு முதல் பரிசை வழங்கினார்
மாவட்ட ஆட்சி தலைவருக்கு அசோசியேசன் சார்பில் மக்கள் சேவகர் விருது வழங்கப்பட்டது.
இதில் மிஸ்டர் தென்காசியாக ஆலங்குளம் ஃபிரண்ட்ஸ் உடற்பயிற்சி கழகத்தைச் சார்ந்த முருகானந்தம் முதல் பரிசையும், 5 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கடையநல்லூர் நேஷனல் ஜிம் க்கும் 10, ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் பெற்றது.
தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவருக்கும் பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களை நகர் மன்ற தலைவர் சாதிர், தேசிய நடுவர் முத்தையா, தேசிய விளையாட்டுவீரர் முத்துப்பாண்டி, கணேசன்,ஜோதி
மாணிக்கம், ராஜ கோபாலன், மனகாவலன்,
கார்த்திக்ராமன், சத்தியமூர்த்தி, மருத்துவர்கள் வேதமூர்த்தி, அப்துல் அஜீஸ், முகமது மீரான், விக்னேஷ், காஜா முகைதீன், செல்வகணேசன், மணிகண்டன், செந்தில்நாதன், கேப்ரியல் டெனிஸ்லின் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
குற்றாலம் பரணி லாட்ஜ் உரிமையாளர் மாரியப்பன் என்ற கருணாநிதி நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்