வயிற்று பிரச்சினைகள் அனைத்தும் குணமடைய திரி பலா சூரணம். !
மருத்துவம்

திரிபலா சூரணம்
இன்றைய கால கட்டத்தில் நாம் உண்கிற உணவுகள், உணவு பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் அனைத்துமே மாறுபட்ட ஒன்றாக மாறி வருகிறது.
பண்டைய கால மனிதர்கள் தங்களின் உணவு முறைகளை அதிகமாக இயற்கையோடு ( சைவம் ) விளைகின்ற, வாழ்கின்ற ( அசைவம்) விசயங்களையே பயன்படுத்தினர்.
அப்போது மனிதன் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வாழ்ந்து வந்தனர். அன்று இந்த அளவிற்கு மருத்துவமோ, மருத்துவ மனைகளோ தோன்றவில்லை. அதற்கான தேவைகளும் மக்களிடத்தில் காணப்படவில்லை.
ஆனால் இன்று மருத்துவ துறை, மருத்துவமனைகள் என எண்ணிலடங்காதவை, வாழ்க்கையின் ஒரு பகுதியாக இணைத்து வாழக்கூடிய துறையாகவே மருத்துவ துறை விளங்குகிறதோ.
இதற்கெல்லாம் காரணம் நமது ஆரோக்கியமே.
இன்றைய காலகட்டங்களில் எந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறதோ அதை விட கூடுதலாக மனிதனின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியத்தின் முக்கிய பகுதி உணவு முறையே
மனித வாழ்வில் ஆரோக்கியத்திற்கு பெரும் பகுதியாக விளங்குவது வயிற்றுறு பகுதியே. வயிறு சரியில்லை என்றாலோ, வயிறு ஒரு மாதிரியான உப்புசம் என்றாலோ, மலச்சிக்கல் ஏதும் ஏற்பட்டோலோ நோய்க் கிருமிகள் அதிகமாக ஏற்படக் கூடும். இதனால் நமது உடலின் மற்ற பாகங்களின் செயல்பாடுகள் குறையக் கூடும்.
திரிபலா சூரணம்
இதற்கெல்லாம் அரு மருந்து தான் திரிபலா எனும் சித்தா சூரனம்.
இது மலை நெல்லிக்காய், தாண்ட்ரிக்காய், கடுக்காய் என மூன்று உணவுப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பொடி, டானிக் போன்றவைகளாகும்.
இந்த சூரணத்தை இரவு நேரம் அரை டம்ளர் சுடு தண்ணியில் அரை ஸ்பூன் அளவு சூரண பவுடரை கலந்து தினசரி குடித்து வந்தால் வயிற்றுப் பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
இந்த சூரணத்தை யார் வேண்டுமானாலும் சுடு தண்ணீரில் கலக்கி ஆர வைத்து குடிக்கலாம்.
வயதிற்கு ஏற்றாற்போல் சூரணத்தின் அளவை கூடியும், குறைத்தும் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
இந்த சூரணம் அனைத்து மருந்து கடைகளிலும் மிக எளிதாக கிடைக்கக் கூடிய பொருளாகும்.
இது பொடியாகவும், டானிக்காகவும் கிடைக்கும்.
இதன் சுவைப்புத் தன்மை சற்று அதிகமான துவர்ப்புடனே இருக்கும்.ஆகவே இதைக் குடிக்கும் போது சர்க்கரை அல்லது காரமாக ஏதாவது ஒரு பொருளை மருந்து குடித்தவுடன் வாயில் போட்டுக் கொண்டால் இந்த துவர்ப்பு தெரியாமல் இருக்கும்.
குடித்து பாருங்கள். நன்மை இருப்பின் உங்கள் பதில்களை கமெண்ட்ஸ் பாக்ஸில் பதிவிடுங்கள் அன்பர்களே.
இதை நான் பல வருடங்களாக உபயோகித்து வருகிறேன். இதன் தன்மையை அறிந்ததால் அனைவரும் நன்மை பெற வேண்டிய இதைப்பற்றி எழுதுகிறேன்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )
மு.ர.