ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு சிறப்பு வழிபாடு. !
ஆண்மீகம்
ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால்,தயிர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து திரளான பக்தர்கள் வழிபாடு
வேலூர் மாவட்டம்,வேலூர் கோட்டையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று நந்திபகவானுக்கு பால்,தயிர்,தேன்,.பன்னீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
மேலும் வில்வ இலைகள் அருகம்புல் மலர் மாலைகள் ஆகியவைகளை கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து மகா தீபாராதனைகளும் நடைபெற்றது
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர் பின்னர் மேளதாளங்கள் முழங்க சாமி உட்பிரகார உலாவும் வந்தது. இதைக்கண்டு பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்தியாளர்
ஆர்.ஜே.சுரேஷ்