பித்தளைப்பட்டி- 15-ம் ஆண்டாம் பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்

ஆண்மீகம்

பித்தளைப்பட்டி- 15-ம் ஆண்டாம் பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்

பித்தளைப்பட்டி- 15-ம் ஆண்டாம் பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள் - பக்தி பரவசத்துடன் கான வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்.!

திண்டுக்கல் மாவட்டம் பித்தளைப்பட்டி ஊராட்சி கிராமத்தில்‌ உள்ள ஐயப்பன் கோயிலில் ஐயப்ப  பக்தர்களின் 15-ஆம் ஆண்டு பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது. இதில் 48 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள் 500 க்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன் குருசாமிகள் ஆறுமுகம், கிருஷ்ணன் , சண்முகம், பொன்ராம்தலைமையில் பூக்குழி இறங்கி சாமி தரிசனம் செய்தனர் .

இந்த விழாவில் சுற்றுப்புற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர்.

இந்த பூக்குழி 16 அடி நீளமும் நான்கு அடி அகலமும்  அமைக்கப்பட்டு மாலை 6:30முதல் அக்கினி வளர்க்கப்பட்டு இரவு  பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. உடன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வரதராஜன், திமுக பிரமுகர் அருண்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அழகர் சாமி