விருதுநகர் பட்டாசு ஆலையில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிதியுதவி வழங்க வணிகர் சங்கம் அரசுக்கு கோரிக்கை.!

விருதுநகர்

விருதுநகர் பட்டாசு ஆலையில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிதியுதவி வழங்க வணிகர் சங்கம் அரசுக்கு கோரிக்கை.!
ஜெபசிங்

விருதுநகர் மாவட்டம்  பொம்மையாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த சாய்நாத் தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 2 பேர் காயம்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த 6 தொழிலாளர்களுக்கு திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின் அடிப்படையில் 25  லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்

மேலும் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்ப வாரிசுகளின் இ எஸ் ஐ, பி.எப் மூலம் பென்சன் பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஆண்டின் தொடக்கத்திலேயே விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது மிகப்பெரிய சோக நிகழ்வாகும். இனிவரும் காலங்களில் விபத்தில்லா பட்டாசு உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்கள் தகுந்த முன் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும் என கூட்டமைப்பின் மாவட்ட  செயலாளர் ஜெபசிங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.