இஸ்ரோ தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!

இஸ்ரோ

இஸ்ரோ தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!
நாராயணன்

இஸ்ரோ -  வின் புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உளம்நிறைந்த வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் isro-வில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும்  இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை எனவும்

உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்குக் காரணமான பல விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பங்களித்த - தொடர்ந்து பங்களித்து வரும் நாராயாணன் தலைமையில் ISRO உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும் எனவும் நாராயணின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகள் & விளம்பர தொடர்புக்கு

newstodaytamilnadu@gmail.com

Whats app 

90420 51486