சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதியாக வாழ முடியாத சூழ்நிலை - கே.பி.முனுசாமி உரை.!

கிருஷ்ணகிரி

சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதியாக வாழ முடியாத சூழ்நிலை - கே.பி.முனுசாமி உரை.!

சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதியாக வாழ முடியாத சூழ்நிலை இருக்கிறது அதையெல்லாம் திசைதிருப்பவே தமிழக முதல்வர் பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார் -  கேபி முனுசாமி குற்றச்சாட்டு.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சூளகிரியில் கே டி ஆர் என்கின்ற  திம்மிராஜ் தலைமையில்  மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 1800 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். 

இந்த நிகழ்ச்சியில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேபி. முனுசாமி,

இன்றைய முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள், எதை எதையெல்லாம் போராடி வெற்றி பெற முடியவில்லையோ அதையெல்லாம் முன்னிறுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அவரது நான்கு ஆண்டுகால ஆட்சியில், தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் எந்தவிதமான பயனுள்ள திட்டங்களையும் அவர் கொண்டு வரவில்லை, அதுமட்டும் இல்லாமல் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அமைதியாக வாழ முடியாத சூழ்நிலை இருக்கிறது அதையெல்லாம் திசைதிருப்பவே பல்வேறு கருத்துகளை அவர் கூறி வருகிறார் என்றார். 

மு க ஸ்டாலின் அவர்கள் கொடுத்த 520 வாக்குறுதிகளில் எந்த வாக்குறுதியையும் முழுமையாக நிறைவேற்றவில்லை, ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்று சொன்னார், தேர்தல் முடிந்த உடனேயே அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என்றுதான் தேர்தல் அறிக்கையில் கூறினார். அதையுமே இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து தான் கொடுத்தார்கள், பல்வேறு காரணங்களை கூறி சுருக்கி விட்டார்கள், இப்படி 520 வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்ற முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிற முதலமைச்சர்தான் இன்றைய முதலமைச்சர்.

தன்னை காப்பாற்றி கொள்வதற்கும், மீண்டும் வெற்றி பெறுவதற்காகவும் தேவையில்லாத கருத்துகளை எல்லாம் முன்வைத்து மக்களை ஏமாற்றக்கூடிய வேலைகளை செய்து வருகிறார். மக்கள் ஏமாற மாட்டார்கள், எனவே வரும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் அதிமுகவை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்றார்.

நிகழ்ச்சியில் கேசவன், முனிகிருஷ்ணன், வேணு, சிவகுமார் ரங்கநாத்,  வெங்கடேஷ், லட்சுமி நாராயண ஜெயராமன், பாலச்சந்திரன் ஹரிஷ், சித்ராஜ், ரகுபதி, முத்து மணி, சந்தோஷ் திம்மராயஸ்வாமி, சிவசங்கர், முரளி மோகன், நரசிம்மப்பா, சத்தியமூர்த்தி, நாகராஜ், கிருஷ்ணா, கோவிந்தராஜ், சசிகுமார், சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு வெங்கடாஜலம், சூளகிரி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வம், சூளகிரி மத்திய ஒன்றிய செயலாளர் மாதேஷ், சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், ஓசூர் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளர் சைனஸ் கிருஷ்ணன் ராமமூர்த்தி, கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் மல்லையன், மாவட்ட துணை செயலாளர் கலைச் செல்வி ராமன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், ஓசூர் முன்னாள் நகர செயலாளர் நாராயணன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் இளஞ்சூரியன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்ன கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர், நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் என 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ