பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன பணிகள் மாவட்ட பொறுப்பாளர் ஆய்வு.!

தென்காசி

பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன பணிகள் மாவட்ட பொறுப்பாளர் ஆய்வு.!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுகவில் நடந்துவரும் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன பணிகள், மாவட்ட பொறுப்பாளர் ஒன்றிய வாரியாக ஆய்வு மேற்கொண்டார்.

வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்க்கொள்ளும் விதமாக அதிமுகவினர் தீவிர பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைத்து, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த அதிமுகவின் அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் தோறும் பொறுப்பாளர்களை அறிவிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அம்மா பேரவை மாநில துணை செயலாளர், முன்னாள் எம்எல்ஏ கலசபாக்கம் பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், வேப்பனஹள்ளி, தளி ஆகிய மூன்று தொகுதிகளில் ஒன்றியம் வாரியாக கூட்டங்களை நடத்தி பூத் கமிட்டியில் 3 பெண்கள் உட்பட 9 பேர் கொண்ட நிர்வாகிகள் அமைத்து பட்டியலை தயாரித்து வழங்க ஆலோசனைகள் வழங்கப்பட்டு, பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வரும்நிலையில்,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, மாவட்ட பொறுப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தளி தொகுதிக்குட்பட்ட கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்க்கொண்ட நிலையில் தொடர்ந்து ஒன்றியம் வாரியாக ஆய்வுகளை நடத்தி பணிகளை விரைவுப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், ஒன்றிய கழக செயலாளர்கள் ஹாரிஸ் ரெட்டி,ரவிக்குமார், பகுதி செயலாளர் ராஜா, மாமன்ற உறுப்பினர் லட்சுமி ஹேமகுமார்,  எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவர் சந்திரன்,  எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர் பொய்யாமொழி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் சசிகுமார், மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் என கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ