200 + தொகுதிகளை கைப்பற்றுவதற்கான வியூகத்தை எடப்பாடி பழனிச்சாமி வகுத்து வருகிறார் - வி.பன்னீர்செல்வம் .!

கிருஷ்ணகிரி

200 + தொகுதிகளை கைப்பற்றுவதற்கான வியூகத்தை எடப்பாடி பழனிச்சாமி வகுத்து வருகிறார் - வி.பன்னீர்செல்வம் .!

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி 200 + தொகுதிகளை கைப்பற்றுவதற்கான வியூகத்தை எடப்பாடி பழனிச்சாமி வகுத்து வருகிறார் - வி.பன்னீர்செல்வம் 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகரம், பாகலூர் சாலையில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணாரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளரும், அம்மா பேரவை மாநில துணை செயலாளருமான வி.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்த கூட்டத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை 15ம் தேதி ஒசூர் மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக பொது செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்றது.

அப்போது மாவட்ட கழக செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி பேசுகையில்...

அதிமுக ஆட்சியில் ஒசூர் மாநகரில் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு, பொதுமக்களின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டது. ஆனால் ஒசூரில் தற்போது மாநகராட்சி வருவாய் அதிகரித்துள்ளது 20 லட்சம் ரூபாயில் ஒசூர் மாநகரின் குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது 1.20 கோடி ரூபாய் செலவிட்டு குப்பைகள் அள்ளினாலும் ஒசூர் பகுதி குப்பை கிடங்காககவே காட்சியளிக்கிறது

திமுக நிர்வாகத்தின் மீதும், மாநகராட்சி செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்கள் கோபத்திலும் அதிருப்தியிலும் உள்ளனர்.. முறையான சாலைகள் இல்லை, தெரு விளக்குகள் எரியவில்லை, சாக்கடைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை போன்ற காரணங்களால் மக்கள் வேதனையில் இருப்பதால் வார்டு உறுப்பினர்கள், நிர்வாகிகள் திமுக அரசின் கையாலாக தனத்தை எடுத்துக்கூறி ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களை பங்கேற்க செய்ய வேண்டும் என்றார்

தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர் வி.பன்னீர்செல்வம் பேசுகையில்...

ஒசூர் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல், முறையாக பணிகள் செய்யப்படாத சூழல் இருந்து வருகிறது.. இந்தநிலையை கண்டித்து தான் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.. போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை திரட்டி திமுக அரசிற்கு எதிராக போராட வேண்டும் 

அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி 200க்கும் அதிமுக தொகுதிகளை கைப்பற்றுவதற்காக வியூகத்தை அமைத்திருப்பதால் தொண்டர்களாக நாம், களத்தில் பணியாற்றி மீண்டும் புரட்சி தமிழரை ஆட்சியில் அமர்த்த கடுமையாக உழைக்க கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் ஓசூர் மாநகர பகுதி கழக செயலாளர்கள் ராஜி, வாசுதேவன், அசோகா ரெட்டி, மஞ்சு, ஓசூர் ஒன்றிய கழக செயலாளர் ஹரிஷ் ரெட்டி, பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ராமு,எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெய் பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் நாராயணன், எம்ஜிஆர் மன்ற  மாவட்ட தலைவர் சந்திரன், மாமன்ற உறுப்பினர் லட்சுமி ஹேமகுமார்,  ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்ன கிருஷ்ணன், ஓசூர் முன்னாள் நகர மன்ற தலைவர் கந்தப்பன், ஓசூர் மாமன்ற உறுப்பினர் சிவராமன், தில்ஷத் ரகுமான், கலாவதி சந்திரன், பாசறை மாவட்ட இணை செயலாளர் செல்வம்,முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் நாராயண ரெட்டி, நந்தகுமார், சுரேஷ்பாபு, முரளி,சீனிவாசன், மாணவரணி மாவட்ட இணை செயலாளர் அருண்,ஓசூர் ஒன்றிய குழு முன்னாள் உறுப்பினர் முரளி, மாவட்ட பிரதிநிதி அட்சு என்கின்ற லக்ஸ்மன்,ஓசூர் வட்டக் கழக செயலாளர்கள், சீனிவாஸ் ஹரி, சூடப்பா,கார்த்திக், கோபால ராமச்சந்திரன், சிவலிங்கம்,சுரேஷ், முகமது அலி,சக்கரவர்த்தி,பாசறை மாவட்ட நிர்வாகி சுரேஷ்,கழக நிர்வாகி 14 வார்ட் மனோ மற்றும் ஓசூர் பகுதி ஒன்றிய மாவட்ட கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள்  கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ