சம வேலை சம ஊதியம் வழங்க வேண்டுமென கூறி ஆட்சியர் அலுவலகத்தில் ஊர்வலமாக சென்று மனு வழங்கிய ஒப்பந்த தொழிலாளர்கள்.!
ராணிப்பேட்டை

சம வேலை சம ஊதியம் வழங்க வேண்டுமென கூறி ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு மீறியும் முற்றுகையிட்டு ஊர்வலமாக சென்று மனு வழங்கிய தொழிற்சாலை ஒப்பந்த பணியாளர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூர் பகுதியில் தனியார் MRF டயர் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது இதில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு சரிவர ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது இதனை கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி அன்று ஒப்பந்த பணியாளர்கள் சார்பாக சம வேலை சம ஊதியம் வழங்க வேண்டுமென தெரிவித்து மாபெரும் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டதன் பேரில் 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர் ஆனால் MRF தொழிற்சாலை நிர்வாகத்தின் தரப்பில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் கடந்த 10-ஆம் தேதி அன்று முதல் ஒப்பந்த பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு 4 நாட்கள் நீடித்து வந்த போராட்டத்தில் வட்டாட்சியர் கோட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் தலைமையிலான பேச்சுவார்த்தை நடைபெற்ற தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் உடன்பாடு எட்டப்படாததால் வேலூர் தொழிலாளர்கள் ஆணையத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று அதில் தொழிற்சாலை நிர்வாகம் கால அவகாசம் கேட்கப்பட்டதாக கூறி தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது..
இந்த நிலையில் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து ஆட்சியரிடம் மனு கொடுக்க முற்பட்டபோது நுழைவாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தியும் தொழிலாளர்கள் அதனையும் மீறி முற்றுகையிட்டு ஊர்வலமாக உள்ளே சென்ற தொழிலாளர்கள் அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் சிறிது நேரம் அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் தங்களுடைய கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது..
செய்தியாளர்
அருள் அரசன்