செக் மோசடி வழக்கில் மருத்துவரின் மனைவிக்கு 6 மாத சிறை
வாலாஜா பேட்டை

செக் மோசடி வழக்கில் மருத்துவரின் மனைவிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து வாலாஜாபேட்டை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு.!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தென்கடப்பந்தங்கள் பகுதியை சேர்ந்தவர் உமாதேவி (45) இவரது கணவர் ஜெயக்குமார் சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் உமாதேவி காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் சங்கர் கணேஷ் (44) என்பவரிடம் கடந்த 2021-ஆம் ஆண்டு 7 லட்ச ரூபாய் கடனாக வாங்கியுள்ளார் உமாபதி அப்போது கடனுக்காக 2021 ஜனவரி மாதம் தேதியிட்டு கசோலையை உமாதேவி வழங்கியிருக்கிறார் அதில் அவர் கொடுத்த செக்கை சங்கர் கணேஷ் தன்னுடைய வங்கியில் கணக்கில் கலெக்ஷனுக்காக போட்டுள்ளார் அப்போது உமாதேவி கொடுத்த செக்கில் பணம் இல்லாததால் செக் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது..
இதனையடுத்து தன்னை ஏமாற்ற மோசடி செய்ததாக சங்கர் கணேஷ் உமாதேவி மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் அந்த வழக்கை விசாரித்த வாலாஜாபேட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் ஜேஎம் 1-வது கோர்ட் நீதிபதி பிரஹந்தா உமாதேவிக்கு 6 மாத சிறை தண்டையும் அதேபோல் 7 லட்ச ரூபாய் பணத்தையும் திருப்பி வழங்க வேண்டுமென தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டார்..
செய்தியாளர்
அருள்அரசன்
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )