பொது சிவில் சட்டம், வஃபு திருத்த சட்ட மசோதா குறித்து கருத்தரங்கம்.!
அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக பொது சிவில் சட்டம், வக்பு வாரிய சட்டத்தை திருத்துவது ஏன் என எதிர்ப்புக் கருத்தரங்கம் அருப்புக்கோட்டை நல்லூர் முஸ்லிம் ஜமாத் தர்கா வளாகத்தில் வைத்து 25 02 2025 மாலை 05 30 மணிக்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தை மாவட்ட தலைவர் SK ராஜேந்திரன், ராஜா சிங் தலைமையில் நடைபெற்றது.
கருத்தரங்கில் மாவட்ட செயலாளர் A மரிய டேவிட், மமக நகர தலைவர் A ஷேக் அப்துல்லா, நல்லூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் M பரக்கத் முகைதீன், பூலாங்கால் ஜமாத் தலைவர் A சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட பொருளாளர் L.தஸ்தகீர் அகமது வரவேற்புரை நிகழ்த்தினார்.
இக் கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் K கனகராஜ், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கென்னடி, ராஜா, அருப்புக்கோட்டை ஆர் சி சர்ச் பங்குத்தந்தை அந்தோணி பாக்கியம், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில செயலாளர் M தாமஸ் சேவியர், வாழவந்தபுரம் முஸ்லிம் ஜமாத் தலைவர் A காஜா நஜ்முதீன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட துணை தலைவர் J J சீனிவாசன், திமுக நகர செயலாளர் AK மணி, பெந்தே கொஸ்தே சபை R ஜோஸ்வா கண்ணன், நல்லூர் முஸ்லிம் ஜமாத் முன்னாள் தலைவர் M நைனா முகம்மது, முன்னால் செயலாளர் L தாஜுதீன் அஹமது, அருப்புக்கோட்டை 9வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் J அகமது யாசிர் ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றினரர்.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு அமைப்பாளர் S காத்தமுத்து நன்றியுரை நிகழ்த்தி இந்த கருத்தரங்க நிகழ்ச்சியை பொதுமக்கள் பங்கேற்புடன் சிறப்புடனும் முடித்து வைத்தனர்.
செய்தியாளர்
அன்சாரி