விருதுநகர் கிழக்கு மாவட்டத்தின் அவசர நிர்வாக குழு கூட்டம்.!

விருதுநகர்

விருதுநகர் கிழக்கு மாவட்டத்தின் அவசர நிர்வாக குழு கூட்டம்.!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் விருதுநகர் கிழக்கு மாவட்டத்தின் அவசர நிர்வாக குழு கூட்டம்

ஒன்றிய பாசிச பாஜக அரசால் கொண்டுவர துடிக்கும் வக்பு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக  மாவட்ட தலைநகரங்களில் வருகின்ற 27. 2. 2025 வியாழக்கிழமை அன்று  நடைபெற இருக்கக்கூடிய ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக 
மாவட்டத் தலைவர் T.மதார்கான் தலைமையில் நடைபெற்றது 

ம.ம.க மாவட்ட செயலாளர் ஆவுடையாபுரம் சிக்கந்தர் 
மாவட்ட பொருளாளர் பந்தல்குடி கமர்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 

இதில் சிறப்பு அழைப்பாளராக 
மாநில செயற்குழு உறுப்பினர் 
அப்துல் கரீம் கலந்து கொண்டார் மற்றும் மாவட்ட துணை அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் இதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 

1.மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை உத்தரவின் அடிப்படையில் நடைபெற  இருக்கின்ற வக்பு திருத்த சட்ட மசோதா எதிர்ப்பு  ஆர்ப்பாட்டத்தை மிகப் பிரமாண்டமாக நடத்துவது என  தீர்மானம் நிறைவேற்றபட்டது

2. விருதுநகர் கிழக்கு மாவட்ட அருப்புக்கோட்டையில் நடைபெற இருக்கின்ற ஆர்ப்பாட்டத்தில்  மாவட்ட கிளைகளில் இருந்து அதிகமான மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செய்தியாளர்

அன்சாரி