தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அமைச்சரிடம் மனு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் K.K.S.S.R இராமசந்திரனை சந்தித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதியதாக கட்டப்பட்டு வரும் நவீன பேருந்து நிலையத்திற்க்கு "கண்ணியமிகு காயிதேமில்லத் பேருந்து நிலையம்" என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கோரிக்கை மனுவை பெற்ற அமைச்சர் கோரிக்கையை அரசுக்கு பரிந்துறை செய்வதாக உறுதி அளித்தார்.
மேலும் கிடப்பில் இருக்கும் E-3 திட்ட சாலை பணிகளை போர்கால அடிப்படையில் விரைந்து முடித்து மக்கள் பயன் பாட்டிற்க்கு கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனுவை பெற்றுக்கொண்டு திட்ட சாலை பணியை தொடங்கி விட்டதாகவும் விரைவில் திட்ட சாலைப்பணியை முடித்து விடுவார்கள் என்றும் உறுதி அளித்தார் அமைச்சர்.
நிகழ்வின் போது விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் T.மதார்கான், அருப்புக்கோட்டை நகர தலைவர் A.ஷேக் அப்துல்லாஹ், நகர தமுமுக செயலாளர் R.செய்யது அலி, நகர மனித நேய மக்கள் கட்சி செயலாளர் S.முகம்மது யூசுப், நகர தமுமுக துணை செயலாளர் K.காதர் பாட்ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.
அன்சாரி