தடையை மீறி கண்டன ஆர்பாட்டம், முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி உட்பட 1000திற்கும் மேற்பட்டோர் கைது.!

திருப்பத்தூர்

தடையை மீறி கண்டன ஆர்பாட்டம், முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி உட்பட 1000திற்கும் மேற்பட்டோர் கைது.!

திருப்பத்தூரில் தடையை மீறி கண்டன ஆர்பாட்டம், முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி உட்பட 1000 திற்கும் மேற்பட்டோர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி தலைமையில்

சென்னை அண்ணா பல்கலை கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை, 

தமிழகத்தில் கஞ்சா, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு துணை போகும் விடியா திமுக அரசை கண்டித்து கண்டண ஆர்பாட்டம் நடைப்பெற இருந்தது.

இதனையடுத்து போலீசார் கண்டன ஆர்பாட்டத்திற்கு அனுமதி தர மறுத்தனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி தலைமையில் அதிமுகவினர் தடையை மீறி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி

திமுக எதிர்கட்சியாக இருந்த போது முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கண்டன ஆர்பாட்டங்களில் ஈடுப்பட்டதாகவும்

தற்போது அதிமுகவின் ஆர்பாட்டங்கள் மக்களுக்காக நடைப்பெற்று வரும் நிலையில் போலீசாரை கொண்டு ஒடுக்கி வருகின்றனர்.

எனவே சென்னை அண்ணா பல்கலை கல்லூரி மாணவியின் பாலியல் குற்றத்தில் ஈடுப்பட்ட அந்த சார் யார் என்பதை தெரியும் வரை அதிமுகவின் போராட்டம் ஓயாது என பேசினார்.

பின்னர் பேசி கொண்டு இருந்த போதே காவல் துறையினர் மைக்கை ஆப் செய்து வலுக்கட்டாயமாக கைது செய்ததாதல் போலீசாரின் அராஜகத்தையும், திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உட்பட 1000த்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர்.

ந.வெங்கடேசன்