தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீட்டின் மேற்ப்பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து. !

சென்னை

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீட்டின் மேற்ப்பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து. !

திருவான்மியூர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீட்டின் மேற்ப்பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து. 

கட்டி ஒன்றரை வருடங்களுக்குள் இடிந்து விழுந்ததால் குடியிருப்புவாசிகள் அச்சம். 

சென்னை திருவான்மியூர் பெரியார் நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பழைய குடியிருப்பை இடித்து விட்டு புதிய கட்டிடம் 62.92. கோடி மதிப்பீட்டில் 330 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.

கட்டி முடிக்கப்பட்டு 480 பயனாளர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளில் பெரும்பாலான கட்டிடங்களில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்தும், விரிசல் விட்டும் காணப்படுகிறது. 

நேற்று மாலை E பிளாக், 4வது மாடியில் 52 எண் கொண்ட வீட்டில் வளர்மதி என்பவர் அவரது பேரக்குழந்தையுடன் இருந்த போது வீட்டின் மேற்பூச்சு பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. 

இதனால் பதறிப்போன அவர் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியில் வந்துவிட்டார். 

கட்டி முடித்து ஒன்றரை ஆண்டுக்குள் கட்டிடத்தின் மேற்பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதே போல் பல கட்டிடங்கள் தரமில்லாமல் கட்டப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. 

தற்போது அதிகாரிகள் அதனை சரிசெய்யும் பணியையும், கட்டடத்தின் உறுதித் தன்மையையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

செய்தியாளர்

       S S K