மேட்டுப்பாளையம் வள்ளுவர் நகரவை தொடக்கப்ள்ளியில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிக்கு வந்த குழந்தைகளை பெற்றோர் திரும்ப அழைத்துச் சென்றனர்.!
மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டம் முழுவதும் ஜாக்டோ ஜியோ சார்பாக 10 அம்ச கோரிக்கைககளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ சங்கத்துடன் இணைந்து இணைப்புச் சங்கங்களும் போராட்டம் நடத்துவதால் அலுவக பணிகள்,அரசுப் பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள் என பல்வேறு அரசு சம்பந்தமான அலுவலகங்கள்,பள்ளிகளில் பணிக்கு யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் வள்ளுவர் நகரவை தொடக்கப்பள்ளியில் காலையில் குழந்தைகள் எப்போதும் போல் பள்ளிக்கு வந்து அவரவர் க்ளாஸ்களில் அமர்ந்தனர்.
நீண்ட நேரம் ஆகியும் ஆசிரியர்கள் வராததால் பெற்றோர்களுக்கு தகவல் அறிந்து தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளி சென்று அழைத்துச் சென்றனர்.
ஆசிரியர் & வெளீயீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )