முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.!
பாபநாசம்

பாபநாசத்தில் புரட்சித்தலைவி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கிழக்கு மேற்கு மற்றும் நகர கழகம் சார்பில் புரட்சித்தலைவி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான துரை சண்முக பிரபு தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி முன்னிலையில் ஏராளமான அதிமுகவினர் அண்ணா சிலையில் இருந்து மேளதாளங்களுடன் பட்டாசுகள் வெடித்து ஊர்வலமாக சென்று பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ராம்குமார் இளைஞரணி மாவட்ட செயலாளர் சூரிய பிரகாஷ் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முகமது இப்ராகிம் பொதுக்குழு உறுப்பினர் மோகன் உட்பட அதிமுக மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
பாபநாசம் இன்பம்