பாஜக - வும் அதிமுக - வும் இணைய வேண்டும்.! எடப்பாடியை வைத்து கொண்டு இது சாத்தியமா? துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி.!

சென்னை

பாஜக - வும் அதிமுக - வும் இணைய வேண்டும்.! எடப்பாடியை வைத்து கொண்டு இது சாத்தியமா?  துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி.!

சென்னையில் நேற்று நடைபெற்ற துக்ளக் 55-வது ஆண்டு விழாவில் இது தொடர்பாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது: பாஜகவும் அதிமுகவும் சேர வேண்டும் என்பதில் நமக்கு சந்தேகமே இல்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி என்ற ஒரு தலைவரை வைத்துக் கொண்டு எப்படி இந்த இணைப்பை ஏற்படுத்துவது என்பது எனக்குப் புரியவில்லை.

ஏனென்றால் எடப்பாடி பழனிசாமியுடன் தனிப்பட்ட முறையில் நான் பேசியிருக்கிறேன்; பழகியிருக்கிறேன். ஒரு அரசியல் தலைவருக்கு உரிய போக்கே அவரிடம் இல்லை. 10,12 சீட் கொடுத்திருந்தால் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்காது. அதிமுக-பாஜக வெற்றி பெறாதுதான்; ஆனால் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது; 2006-ல் கருணாநிதி (மைனாரிட்டி) ஆட்சி செய்தது போல ஸ்டாலினால் ஆட்சி செய்ய முடியாமல் என்றைக்கு வேண்டுமானாலும் திமுக ஆட்சி கவிழும்; ஆட்சியில் பங்கு கேட்பவர்களுக்கு ஸ்டாலினால் மாட்டேன் என்று கூறிவிட முடியாது. இதை எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லையே.. யார் அவருக்கு ஆலோசனை கொடுக்கிறார்? யார் புள்ளி விவரம் கொடுக்கிறார்?

மிகப் பெரிய வாய்ப்பை நழுவ விட்டவர் எடப்பாடி பழனிசாமி. பாஜக- அதிமுக சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிற நான் கூறுகிறேன், பாஜக தன்னுடைய நிலைமையை அதிகமாக மாற்றிக் கொண்டு அதிமுகவை கட்டிக் கொண்டால் பாஜகவுக்குதான் நட்டம் வரும் என்பதை அவர்கள் உணர வேண்டும். இவ்வாறு துக்ளக் குருமூர்த்தி பேசினார்.