திமுக சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்102 - வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தெருமுனை பிரச்சாரக்கூட்டம்,!

கிருஷ்ணகிரி

திமுக சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்102 - வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தெருமுனை பிரச்சாரக்கூட்டம்,!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம் ஒன்றிய இளைஞரணி திமுக சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்102 - வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தெருமுனை பிரச்சாரக்கூட்டம், நெடுங்கல் கிராமத்தில் 24/06/2025 செவ்வாய்க்கிழமை மாலை 6:00 மணியளவில் நடைபெற்றது.

மாவட்ட கழக செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன், MLA அவர்களின் ஆணைக்கிணங்க, ஒன்றிய கழக செயலாளர்  க.மகேந்திரன் அவர்களின் தலைமையில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் R.சுரேஷ் அவர்கள்  வரவேற்புரை ஆற்றினார்.

தலைமை கழக பேச்சாளர் கனல்.சுப்பிரமணி மற்றும் இளம் பேச்சாளர் சீனிவாசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், மு.ஊராட்சி மன்ற தலைவர்கள், மு.ஒன்றிய குழு உறுப்பினர்கள், அணிகளின் துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர்கள், ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என கலந்துக்கொண்ட அனைவருக்கும்  ஒன்றிய கழக செயலாளர்  க.மகேந்திரன் அவர்களின் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.