சூளகிரி அருகே 14 கிராம மக்கள் இணைந்து நடத்திய ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம்.!
கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே 14 கிராம மக்கள் இணைந்து நடத்திய ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகாவிற்கு உட்பட்ட சென்னபள்ளி ஊராட்சி தேவர் குட்டபள்ளி, முருக்கனபள்ளி, கர்னப்பள்ளி, ஒட்டையனூர், பால்ஜொனைகெட்டு, கொண்டம்பட்டி, கோவில் எப்பளம், டேம் எப்பளம், எரப்பன்பையில், பெரியபள்ளம், மேடுபள்ளிகாடு, சின்னார், ஆட்டுக்காரன் கொட்டாய், பந்தர்குட்டை ஆகிய 14 கிராமங்களை சேர்ந்த ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய நுாதன அஷ்டபந்தன சக்ரஸ்தாபன ஸ்ரீ மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத மகா வேள்வி யாகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து புனித கலசங்களை ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுமந்து வந்து மந்திரங்கள் ஓதி கோயிலில் புனித கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் எல்.செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் முருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர், அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி பாலகிருஷ்ண ரெட்டி, ஓசூர் பூ வியாபாரிகள் சங்க தலைவர் கே டி ஆர் என்கின்ற திமிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் தலைமை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வம், முன்னிலை முன்னால் கவுன்சிலர் முருகன்,14 கிராம பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ