ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து தேசியக்கொடி ஊர்வலம்.!
கிருஷ்ணகிரி

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ஊத்தங்கரை துணை கிளையின் சார்பாக இன்று 23.05.2025 காலை 10 மணிக்கு ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து தேசியக்கொடி ஊர்வலம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இருந்து நான்கு ரோடு சந்திப்பு வரை இந்த ஊர்வலம் நடைபெற்றது. விஷ்ணு யோகானந்தா சுவாமிஜி தலைமை தாங்கியும், RPS மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் R.பொன்னுசாமி கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் EX சேர்மன் டாக்டர் V.தேவராசு MD.,மாவட்ட பொருளாளர் V. குணசேகரன், துணைத் தலைவர் M.ராஜா, சேர்மேன் P. ரஜினி சங்கர், துணை சேர்மன் K. சிவகிரி முருகன், செயலாளர் D.செல்வன், பொருளாளர் R. முனியப்பன் முன்னிலையிலும் செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர் K.பத்மநாபன், உறுப்பினர்கள் அருள், செல்லராம், முன்னாள் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த ஊர்வலத்தை மிகவும் சிறப்பாக நடத்திக் கொடுத்தார்கள்.
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ