கேர்ள் ப்ரண்ட்ஸ் மற்றும் மனைவிகளுடன் கைதிகள் இன்பச் சுற்றுலா.! போலீசார் மற்றும் கைதிகளின் உறவினர்கள் கைது.!

ராஜஸ்தான்

கேர்ள் ப்ரண்ட்ஸ் மற்றும் மனைவிகளுடன் கைதிகள் இன்பச் சுற்றுலா.! போலீசார் மற்றும் கைதிகளின் உறவினர்கள் கைது.!

மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் கைதிகளிடம் லஞ்சம் பெற்று கைதிகளின் மனைவிகள்,கேர்ள் ப்ரண்ட்ஸ் என உல்லாசமாக இருக்க வைத்த போலீசார் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை காவல் துறையினர் கண்டறிந்து கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாமல் பெண் தோழிகள், மனைவிகளுடன் ரூம் புக் செய்து உல்லாசமாக இருக்க, போலீசார் அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது இந்த சிறையில் கைதிகளாக இருக்கும் ரஃபிக், பன்வார்லால், அன்கித் பன்சால் மற்றும் கரன் குப்தா ஆகியோர் ஜெய்ப்பூரின் எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்ய முன் அனுமதி பெற்றிருந்தனர். இவர்களை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு வர வேண்டும். ஆனால் கடந்த சனிக்கிழமை காலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக சம்பந்தப்பட்ட ஐந்து கைதிகளுடன் 5 கான்ஸ்டபிள் ஜெய்ப்பூர் மத்திய சிறையில் இருந்து புறப்பட்டனர். இவர்கள் மாலை 5:30 மணிக்குள் சிறைச்சாலையை அடைய வேண்டும் இதற்கு மாறாக சிறைக்கைதிகளிடம் தலா ஐந்தாயிரம் ரூபாய் என 25 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக் கொண்ட போலீசார், கைதிகள் ரபீக் மற்றும் பன்வார்லால் ஆகியோர் தங்களது மனைவி மற்றும் பெண் தோழியை ஜலபுரா பகுதியில் உள்ள ஹோட்டலில் சந்திக்க அனுமதித்துள்ளனர்.இதே போல அன்கித் மற்றும் கரண் குப்தா ஆகியோர் விமான நிலையம் அருகே உள்ள உணவு விடுதியில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது போலீசார் அவர்களை கைது செய்தனர்.

அதே உணவு விடுதியில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றை அங்கித்தின் பெண் தோழி புக் செய்திருந்தார். சிறைக் கைதிகளிடம் லஞ்சமாக பணம் பெற்றுக் கொண்டு அவர்களை உல்லாசமாக இருக்க ஜெய்ப்பூர் சிறைச்சாலையில் உள்ள முக்கிய கைதி ஒருவரின் மூலமே லஞ்ச பணம் கைமாறி இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக எண்ணற்ற தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட போலீசார் கைதிகளையும் சம்பந்தப்பட்ட ஐந்து போலீஸ்காரர்கள் மற்றும் கைதிகளின் மனைவிகள், பெண் தோழிகள், உறவினர்கள் என 13 பேரை கைது செய்தனர்.

இந்த இந்த அதிரடி நடவடிக்கையின் போது ரஃபீக்கின் மனைவி போதை பொருள் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது பின்னர் அவர் தனியாக போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் அரங்கேறிய இருக்கும் இந்த சம்பவம் அம்மாநில சிறை துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது இதில் தொடர்புடைய காவல்துறையினர் கைதிகள் உள்ளிட்ட நபர்களை கைது செய்ய போலீசார் முடிவெடுத்தனர் தொடர்பான தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது. போலீசார் ஒரு கைதியை மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும் கண்டறியப்பட்டது.