உலக நூல் உலக சாதனை மாநாட்டில் 18 ஆய்வாளர்கள் எழுதிய ஆய்வு கட்டுரைகளை புத்தகமாக வெளியிடப்பட்டது.!
கிருஷ்ணகிரி

இன்று கிருஷ்ணகிரி அன்பு குளோபல் பேமிலி மற்றும் உலக திருக்குறள் மையம் இணைந்து நடத்திய நிகழ்வில் திருக்குறள் உலக நூல் உலக சாதனை மாநாட்டில் 18 ஆய்வாளர்கள் எழுதிய ஆய்வு கட்டுரைகளை புத்தகமாக வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளுவர் வாழ்த்துரையை முனைவர். வே.அருள்மொழி மற்றும் செ.லதா. ஆகியோர் வழங்கினர்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி அவர்கள் ஆய்வுக் கோவை வெளியிட, முதல் புத்தகத்தை தமிழ் பேராசிரியர், முனைவர். நேசன் பெற்றுக் கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக BSNL ஷபீர், சமூக ஆர்வலர் மணிகண்டன், தகடூர் தமிழ் கதிர், கோவிந்தன் தலைமையாசிரியர் (ஓய்வு), ரோஜாவதி தலைமையாசிரியர் (ஓய்வு) தலைமை ஆசிரியர் சேகர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
நிகழ்ச்சியினை அம்பேத் தொகுத்து வழங்கினார். மேலும் பொதுமக்கள், அன்பு குளோபல் உறுப்பினர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நிகழ்ச்சியின் முடிவில் நா.உஷா அன்பு நன்றி கூறினார்.
மாருதி மனோ