ஊத்தங்கரையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரிமாவட்டம், ஊத்தங்கரையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டதலைவர் கே. சண்முகம் முன்னாள் சங்க செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ராஜா மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் மாசிலாமணி, ராதாகிருஷ்ணன், சிவா, முனிரத்தினம், செல்வராஜ், ராமரு, விஷ்ணு, கிழக்கு மாவட்ட தலைவர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய நிர்வாகிகள் பெருமாள், பிரபு, செந்தில்குமார், முத்துகவுண்டர், கோவிந்தன், ராஜிவ்காந்தி, பசவராஜ், செந்தில்நாதன், சுப்பிரமணி ஆகியோர் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இக்கூட்டத்தில் மாநில தலைவர் கே எம் இராமகவுண்டர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.....
ஊத்தங்கரை வட்டாரத்தில் உள்ள 33 ஏரிகள் இணைப்பு திட்டத்தில், இமாம் சாயபு ஏரியிலிருந்து குருகர் ஏரி வழியாக இந்திகுட்டை வழியாக ரெட்டிபட்டி ஏரிக்கு இணைக்க வேண்டும்,
ரெட்டிபட்டி ஏரிகறை வழியாக அரூர்தேசிய நெடுஞ்சாலைவரை தார்சாலை அமைக்கவேண்டும், பாவக்கல் பெருமாள் கவுண்டன் ஏரிக்கும், நல்லுவம்பட்டி ஏரிக்கும் பாம்பாறு கால்வாயுடன் இணைப்பு வழங்க வேண்டும்,
அங்குத்திசுணை ஏரி மற்றும் கால்வாய் தூர்வாரி தண்ணீர் புதூர் ஏரி வரை இணைக்க வேண்டும்,
ஊத்தங்கரைக்கு வருவாய் கோட்டம் உருவாக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டன.
அரசு வழங்கும் மானிய திட்டங்கள் அரசு அதிகாரிகள் எந்த மானிய திட்டங்களும் கிடைக்காமல் ஆளும் கட்சிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டன.
ஊத்தங்கரை வட்டாச்சியரகம் இலஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் செய்வது இல்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரியில் வரும் ஜுலை 5 உழவர் தின பேரணி மற்றும் ஜயா நாராயணசாமியின் 100 ஆவது பிறந்த நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பெருந் திரளாக கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்வின் முடிவில் வடிவேல் நன்றி கூறினார்.
செய்தியாளர்
மாருதி மனோ
விளம்பர தொடர்புக்கு