திமுக அரசு பொதுமக்கள் மீது வரி சுமையையும் கடன் சுமையையும் ஏற்றி உள்ளது .! முன்னால் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி. !
கிருஷ்ணகிரி

திமுக அரசு பொதுமக்கள் மீது வரி சுமையையும் கடன் சுமையையும் ஏற்றி உள்ளது, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்பி அதிமுக ஆட்சி அமைக்கும் : முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பேச்சு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஓசூர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு நடந்த இந்த நிகழ்ச்சியில் சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில், ஓசூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், துணை ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், நவீன், ஆகியோர் ஏற்பாட்டில் பேரிகை பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அப்போது அவர் அனைவருக்கும் கட்சி துண்டு மற்றும் வேஷ்டிகளை அணிவித்து அதிமுகவில் இணைந்ததற்கு வரவேற்பு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி,
தற்போது உள்ள திமுக அரசுக்கும் கடந்த ஆண்டுகளில் அம்மா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சிக்கும் உள்ள வித்தியாசங்கள் நமக்கு தெரியும், தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் நடந்து வருகிறது.
கடந்த 70 ஆண்டுகளாக இல்லாத கடனை கடந்த நான்கு ஆண்டுகளில் தற்போது உள்ள திமுக அரசு வாங்கியுள்ளது. திமுக அரசு பொதுமக்கள் மீது வரி சுமையையும் கடன் சுமையையும் ஏற்றி உள்ளது. திமுக தலைமையில் எவ்வளவு பெரிய கூட்டணி அமைந்தாலும் மக்கள் கூட்டணியோடு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வரும் 2026 பொது தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அம்மா ஆட்சியை அமைப்பார். 2026 ல் திமுகவை வீட்டுக்கு அனுப்பி அதிமுக ஆட்சி நடக்கும் என தெரிவித்தார்.
உடன் ஓசூர் பகுதி செயலாளர் ராஜு, ஓசூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஹாரிஸ் ரெட்டி, மாவட்ட துணை செயலாளர் கலைச்செல்வி ராமன்,ஓசூர் மாமன்ற உறுப்பினர் லட்சுமி ஹேமகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாரதி, ஒன்றிய அவ்வை தலைவர் முனிச்சந்திரப்பா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
விளம்பர தொடர்புக்கு