மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வர தடை.!

தென்காசி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வர தடை.!

ஜூன் 1ம் தேதி முதல்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வர தடை

மாவட்ட ஆட்சியர் தகவல் 

தென்காசி மே 23 

ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் அறிவித்துள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பலரும் இருசக்கர வாகனங்கள், கார்களில் வந்து செல்கின்றனர்.

திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை தரும் போது மட்டும் தனி நபர்கள் வரும் கார்கள் இருசக்கர வாகனம் உள்ளிட்டவை அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் வருகை தருகின்றவர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தால் அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியரின் பெயரில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்

AGM கணேசன்